சிதம்பர ரகசியம்


                    சிதம்பரம் நடராஜர் கோவில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் நடராஜர் கோவில் என்றும், சிதம்பரம் தில்லை கூத்தன் கோவில் என்றும், சிதம்பரம் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
            
சிலையின் வரலாறு:
                 சிங்கவர்மன் என்னும் மன்னன் தனது பாவமும், தோசமும் தீர, தில்லை சிவகங்கை குளத்தில் மூழ்கி குணமடைந்ததால், தில்லை நடராஜருக்கு ஒரு சிலை வடிக்க எண்ணினான். அதன்படி, நமச்சிவாய முத்து என்ற ஸ்தபதியைக் கொண்டு தாமிரத்தால் ஆன சிலையை வடிவமைத்தான். இதுவே தில்லை நடராஜர் சிலையாகும். சிலையின் அழகில் மயங்கிய மன்னன், அடுத்த சிலையினை தங்கத்தால் உருவாக்கச் செய்தான். அடுத்து இரண்டு சிலைகள் அதேபோல் செய்தான். பின் இதுபோல் சிலையை இனி உருவாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியின் கையை அரசன் துண்டித்துவிட்டான். சிற்பி அசராது மரத்தால் ஆன கை செய்து, அதற்கு பிறகு மற்றொரு ஐந்தாவது சிலையினை செய்தார். இதனால் ஐந்து ஸ்தலங்களில் உள்ள நடராஜர் சிலைகளும் ஒன்று போல் இருக்கும்.
கோவிலின் கட்டிட அமைப்பு
               இக்கோவிலில் நான்கு ராஜ கோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளம் கொண்டதாகவும், 60 அடி அகலம் கொண்டதாகவும், 135 அடி உயரம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையதாகும்.
கோவிலின் சிறப்புகள்:
               சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதில், உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாகக் கருதுகின்றனர்.
சிதம்பர ரகசியம்:
               மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிக்கிறது.
                பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64+64 மேற் பலகைகளைக் கொண்டுள்ளது. இது, 64 கலைகளைக் குறிக்கிறது. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களைக் குறிக்கிறது.
                பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியைக் குறிக்கிறது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கிறது.
சிலையின் சிறப்புகள்:
               சிலையை முன்னால் இருந்த பார்த்தால் நடராஜர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த நிலையில் இருப்பார். பின்புறம் இருந்து பார்த்தால் ஒருகால் தூக்கி ஆடுவது தெரியும்
               எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்