செங்கோட்டை

கோட்டையின் அமைவிடம்:


          இந்தியாவின் நீண்ட கால வரலாற்றையும், அதன் கலைகளையும் உள்ளடக்கிய முக்கிய கட்டட வளாகங்களில் இதுவும் ஒன்றாகும். செங்கோட்டை இந்தியாவில் டெல்லியில் அமைந்துள்ளது. டெல்லி கோட்டையானது, லால் குயிலாஹ் அல்லது லால் குயிலா என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயருக்கு மேன்மை மிக்க கோட்டை என்பது பொருளாகும். சிவப்புக் கற்களால் கட்டப்பட்டு அப்பழுக்கற்ற தோற்றத்தைக் கொண்டுள்ள இந்த பிரம்மாண்ட கோட்டை உலகில் முக்கியமான ராஜ கோட்டைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கோட்டையின் சுவர்கள் வழுவழுப்பாகவும், இதன் மதிற்சுவர்கள் உறுதியான கம்பி வரிசைகளால் இழைத்துக் கட்டப்பட்டது.

செங்கோட்டை உருவான விதம்:


          முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638 ஆம் ஆண்டு இந்த மிகப் பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார். மேலும், 1648 ஆம் ஆண்டு இந்தக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இந்த செங்கோட்டை உண்மையில், குயிலா--முபாரக் (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது. ஏனெனில், இது அரசக்குடும்பங்களின் வசிப்பிடமாக இருந்தது.
          உஸ்தாத் அஹமத் எனும் கட்டிடக் கலைஞரால் இக்கோட்டை வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. 2.41 கி.மீ நீளத்துக்கு இந்த கோட்டை நீண்டுள்ளது. லாகூர் கேட் மற்றும் இந்தியா கேட் என்ற இரண்டு பிரதான வாயில்கள் இந்த கோட்டைக்கான வாசல்களாக அமைந்துள்ளன.
          செங்கோட்டையில் உள்ள காட்சிப் பொருள்கள் மிகவும் உயர் தரமான கலை ஓவியங்களையும் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. செங்கோட்டையில் உள்ள கலை வேலைப்பாடு பாரசீகர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்களின் கலைத் தொகுப்பாகும்.
          இந்த கோட்டைக்குள்ளே பல அற்புதமான கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவற்றில் திவான் ஆம் என்பது வெகு சிறப்பான மாளிகையாக கருதப்படுகிறது. இந்த மாளிகைக் கூடம் மன்னர் பொதுமக்களை சந்தித்து குறைகளை விசாரிக்கும் ராஜாங்க மண்டபமாக இருந்துள்ளது. திவான் காஸ் எனும் அரண்மனை மாளிகை மன்னர் முக்கியமான ஆலோசனைகள் மற்றும் அவைக் கூட்டங்களை நடத்தும் கூடமாக இருந்துள்ளது. இது தவிர மோதி மஸ்ஜித் எனும் மசூதி ஒன்றும் பின்னாளில் இந்த கோட்டைக்குள் கட்டப்பட்டுள்ளது. ஔரங்கசீப் மன்னரால் தனது சொந்த உபயோகத்துக்காக இந்த மசூதி கட்டப்பட்டது.

செங்கோட்டையின் சிறப்பு:


           இது 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது.
           பேரரசர் ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த செங்கோட்டையின் செயல்திட்டம் மற்றும் அழகியல் முகலாயர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்துகிறது.
            பழைய டெல்லியின் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக செங்கோட்டை உள்ளது. இது ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றது. இந்தக் கோட்டையானது, ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான ஆகஸ்ட் 15 முதல் இந்தியப் பிரதமரால் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுமிடமாகவும் இருந்து வருகிறது. இது பழைய டெல்லியின் மிகப்பெரிய நினைவுச் சின்னமாகவும் விளங்குகிறது. மன்னராட்சி முடிந்து ஒன்றுபட்ட பரந்த இந்தியாவின் தலைநகராக விளங்கும் டெல்லி நகரில் வரலாற்று காலத்தின் சாட்சியாகவும், புராதன கலைச் சின்னமாகவும் வீற்றிருக்கும் இந்த செங்கோட்டையில் தான் இந்தியப் பிரதமர் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று இந்திய தேசியக்கொடியை ஏற்றுகிறார்.
           
      
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்