விளையாட்டுகளின் வரலாறு
விளையாட்டிலே உள்ளக விளையாட்டு, வெளியக விளையாட்டு, கோட்டு விளையாட்டு, கோடில்லா விளையாட்டு, குழு விளையாட்டு, தனி விளையாட்டு என பல வகைகள் உள்ளது. விளையாட்டு மனிதனின் உடலையும், மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது. அக்காலத்தில் மக்கள் பொழுது போக்கிற்காக விளையாடினர். ஆனால் இக்காலத்துல், விளையாட்டில் புகழைச் சேர்க்கவும், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளவும் விளையாடி வருகின்றனர். அத்தகைய விளையாட்டுகள் எப்படித் தோன்றின என்பதை பற்றி இதில் காண்போம்...
கண்ணாமூச்சி:
கண்ணாமூச்சி என்று சொன்ன உடனே நம்முடைய சிறு வயது தான் நியாபகம் வரும். நம்ம ஊர் கண்ணாமூச்சியை மேலைநாட்டினர் வேறு மாதிரியாக விளையாடுகிறார்கள். அங்கு கண்ணை மறைப்பதற்கு பதிலாக ஒருவர் தலையை முழுமையாக ஒரு தொப்பியால் மூடி விடுவார்கள்.
கபடி:
கபடி என்றால் "கபடி கபடி" என்ற வார்த்தை தான் முதலில் நியாபகத்திற்கு வரும். இன்றும் பலர் இதில் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 'கபடி' என்ற சொல், 'கைபிடி' என்ற சொல்லிலிருந்து உருவானது. இன்றைக்கு கபடி விளையாட்டு ஒரு சர்வதேச விளையாட்டாக வளர்ந்து வருவது பெருமைக்குரியது.
கோலி குண்டு:
நம்ம ஊர் கோலி குண்டு விளையாட்டை பழங்கால ரோமானியர்கள் ஆர்வமான விளையாட்டாக விளையாடி வந்தனர். பெரியவர்களும், குழந்தைகளும் வட்டத்தினுள் உருண்டையான கூழாங்கற்களைக் கொண்டு அந்த ஆட்டத்தை விளையாடினார்கள்.
இதுவும் நாம் சிறு வயதில் விளையாடிய விளையாட்டு தான். நாம் பச்சைக் குதரை தாண்டுவதை மேலைநாடுகளில் "தவளைத் தாவல்" என்று கூறுகிறார்கள்.
கிரிக்கெட்:
கிரிக்கெட், தூக்கத்தில் கூட எழுந்து பார்க்கும் அளவிற்கு நம்மை ஈர்த்துவிட்டது. இன்று நம்மவரின் விருப்பமான விளையாட்டில் ஒன்று கிரிக்கெட். தென்கிழக்கு இங்கிலாந்தில் தோன்றிய கிரிக்கெட், 18 ஆம் நூற்றாண்டுகளிலேயே அந்நாட்டின் தேசிய விளையாட்டாக மாறிவிட்டது. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர் ஆண்ட நாடுகளில் அவ்விளையாட்டு பரவியது. நாடுகளுக்கு இடையிலான சர்வதேச போட்டிகள் 1844 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆடப்பட்டு வருகிறது. முதல் ஆட்டம் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆடப்பட்டது.
ஹாக்கி:
ஹாக்கி என்பது இந்தியாவின் தேசிய விளையாட்டாகும். இங்கிலாந்திலும் பழங்காலத்தில் ஹாக்கியை விளையாடியுள்ளனர். மட்டைக்குப் பதில் வெறும் கட்டைகளைக் கொண்டு ஆடினார்கள்.
குண்டு எறிதல்:
இன்றைய பெண்மணிகள் குண்டு எறிதலில் சரித்திரம் படைத்து வருகின்றனர். 14 ஆம் நூற்றாண்டிலேயே இந்த வகை விளையாட்டுகளை மேலைநாடுகளில் ஆடப்பட்டு வந்திருக்கின்றனர். அக்காலத்தில் இளைஞர்கள், கடினமான கற்களை கொணு நீண்ட தூரம் வீசி தங்கள் பலத்தைக் காட்டுவார்கள்.
கால்பந்து:
இந்த விளையாட்டிற்கு வயது நூறுக்கு மேலாகிறது. ஆனால் பழங்காலத்திலேயே கிரேக்கர்களும், ரோமானியர்களும், சீனர்களும் இதைப் போன்ற விளையாட்டை விளையாடி இருக்கின்றனர். 1863 ல் இங்கிலாந்தில் முதல் கால்பந்துக் கழகம் தோன்றியது.
பேட்மிண்டன்:
இந்த விளையாட்டினை பிரிட்டானிய இராணுவ வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர். பெண்கள் இந்த விளையாட்டை மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டே விளையாடுவார்கள். இந்த விளையாட்டுதான் தற்போது பேட்மிண்டனாக மாறின. இது 1860 ஆம் ஆண்டு தோன்றியது.
கருத்துகள்
கருத்துரையிடுக