திருவள்ளுவர் சிலை

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் திருக்குறள் என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் திருவள்ளுவர். சிலையின் வரலாறு: திருவள்ளுவர் சிலையானது கன்னியாகுமரிக் கடலில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரமுள்ள சிலை ஆகும். சிலை உருவான விதம்: 1978 ஆம் ஆண்டு, பாரதப் பிரதமர் மொராஜி தேசாயால் அடிக்கல் நாட்டப்பட்டு பல பிரச்சனைகளால் தடைபட்ட கட்டுமானப் பணி 1990 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு 5000 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களால் தமிழகத்தின் மிகச் சிறந்த சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதியின் மேற்பார்வையில் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு 1999 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இந்தப் பிரமாண்டமான சிலையானது சனவரி 1இல் 2000 ஆம் ...