இரத்த தானம் செய்வதின் நன்மைகள்

         💉இரத்த தானம் செய்வதன் மூலம் இதனை பெறுபவர்கள் மட்டுமல்ல கொடுப்பவருக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன.
         💉இரத்த தானம் செய்வதன் மூலம் ஒருவருக்கு ஏற்படும் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயங்கள் குறைகிறது. ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்தின் அளவு அதிகரிக்கும் போது சில சமயம் அது இதய நோய்க்கு வழி வகுக்கிறது. முறையான இடைவெளியில் ரத்த தானம் செய்வதன் மூலம் இந்த இரும்புச் சத்து அதிகரிப்பு ஏற்படாமல் இதயத்தைக் காத்துக் கொள்ள இயலும்.
         💉இரத்த தானம் செய்வதால் புற்று நோய் ஏற்படுவதிலிருந்து நம் உடல் காக்கப்படுகிறது. உடலில் இரும்புச் சத்து அதிகரிப்பால் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
         💉இரத்த தானம் செய்த பின் உடல் இழந்த ரத்தத்திற்கு இணையான புது ரத்தம் உருவாகிறது. இதன் மூலம் நம் உடலில் புதிய செல்கள் உருவாக்கம் அதிகரிக்கிறது. இது நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
         

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்