கண் தானம் செய்யக் கூடியவர்கள் மற்றும் செய்யக் கூடாதவர்கள்

கண் தானம் செய்யக் கூடியவர்கள்:
          ஆண், பெண் இருபாலரும், அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம்.
          கண் கண்ணாடி அணிந்தவர்களும் கண் தானம் செய்யலாம்.
          இரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் கூட தானம் செய்யலாம்.
          ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கூட கண் தானம் செய்யலாம்.
          உடலில் பிற உறுப்புகளில் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட தானம் செய்யலாம்.

கண் தானம் செய்யக் கூடாதவர்கள்:
          கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விசக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் ஆகியவற்றால் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்யக் கூடாது.

சில பொதுவான தகவல்கள்:
          ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்களைத் தானமாக அளிக்க முடியும்.
          ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அவரது கண்கள் அகற்றப்பட வேண்டும்.
          அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கண்களை அகற்ற வேண்டும்.
          கண் வங்கிக் குழுவினர் கண் தானம் செய்தவரின் வீட்டிற்கே வந்து கண்களைப் பெற்று கொள்வார்கள்.
          இந்த கண்களைத் தானமாக பெறும் நிகழ்வு 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்து விடும்.
          இறந்த பின் கண்களை எடுப்பதால் முக மாறுதல்கள் ஏதும் ஏற்படாது.
          

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்