திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

       📖திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறள் பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
       📖இது அறம், பொருள், இன்பம் என மூன்று இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.
       📖இது குறள் வெண்பா வகையைச் சார்ந்தது.
       📖திருக்குறள் முதன்முதலாக புத்தகமாக அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
       📖இது முப்பால், உலக பொதுமறை, வாயுறை வாழ்த்து என பல சிறப்பு பெயர்களைப் பெற்றுள்ளது.
       📖இந்நூல் '' கரத்தில் தொடங்கி '' கரத்தில் முடிவடைகிறது.
       📖 திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் 14000.
       📖தமிழ் எழுத்துகள் 247 ல் 37 எழுத்துகள் மட்டும் திருக்குறளில் இடம் பெறவில்லை.
       📖திருக்குறளில் அனிச்சம் மற்றும் குவளை என இரு மலர்கள் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளன.
அனிச்சம்:  
    அதிகாரம் : 9 - விருந்தோம்பல்
    குறள் எண் : 90
"மோப்பக் குழையும் அனிச்சம் 
                                                முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து." 

அதிகாரம்:120 - நலம் புனைந்துரைத்தல்
குறள் எண் : 1120    
"அனிச்சமும் அன்னத்தின்                                                 தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்."

குவளை:
அதிகாரம்:120 - நலம் புனைந்துரைத்தல்
குறள் எண் : 1114
"காணிற் குவளை கவிழ்ந்து
                                         நிலன்நோக்கம் மாணிழை கண்ணொவ்வேம்
                                                         என்று."

       📖திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சி.
அதிகாரம்:120 - நலம் புனைந்துரைத்தல்
குறள் எண் : 1120
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும்
                                                               மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.".

       📖திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி.
      அதிகாரம் : 28 - கூடாவொழுக்கம்
      குறள் எண் : 277
"புறங்குன்றி கண்டனைய ரேனும்
                                                அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து."

        📖திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ''.
       📖திருக்குறளில் இரு முறை 'குறிப்பறிதல்' அதிகாரம் இடம்பெற்றுள்ளது.
      அதிகார எண்கள் : 71, 110
      📖திருக்குறளில் பனை மற்றும் மூங்கில் என இரு மரங்கள் பெயர் இடம்பெற்றுள்ளன.
பனை:
    அதிகாரம் : 11 - செய்நன்றி அறிதல்
    குறள் எண் : 104
"தினைத்துணை நன்றி செயினும்
                                     பனைதுணையாக்
கொண்வர் பயந்தெரி வார்."

     அதிகாரம் : 44 - குற்றங்கடிதல்
     குறள் எண் : 433
"தினைத்துணையாங் குற்றம்
                   வரினும் பனைதுணையாக்
கொள்வர் பழிநாணு வார்."

     அதிகாரம் : 129 - புணர்ச்சி விதும்பல்
     குறள் எண் : 1282
"தினைத்துணையும் ஊடாமை
              வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்."

      📖திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து 'னி'. மொத்தம் 1705 'னி'க்கள் உள்ளன.
      📖திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்து 'ங', 'ளீ'.
:
      அதிகாரம் : 26 - புலால் மறுத்தல்
      குறள் எண் : 251
"தன்னூன் பெருக்கற்குத்
                     தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்."

ளீ:
         அதிகாரம் : 94 - சூது
         குறள் எண் : 938
"பொருள்கெடுத்துப் பொய்மேற்
                       கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது."

       📖திருக்குறளில் இடம்பெறாத இரண்டு சொற்கள் தமிழ், கடவுள்.
       📖திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது
       📖திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
       📖திருக்குறளில் எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் மட்டும் இடம்பெற்றுள்ளது.
        அதிகாரம் : 64 - அமைச்சு
        குறள் எண் : 639
"பழுதெண்ணும் மந்திரியின்                             பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்."

       📖திருக்குறள் மூலத்தை முதல்முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்.
       📖திருக்குறளுக்கு முதன்முதலில் உரையெழுதியவர் மணக்குடவர்.
       📖திருக்குறள் உரையாசிரியர்களுள் 10 ஆவது உரையாசிரியர் பரிமேலழகர்.
      📖திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
      📖திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப் ஆவார்.
      📖திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
      📖திருக்குறள் நரிக்குறவர்கள் பேசும் 'வக்போலி' மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

     

         

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்