கல்கி
✒புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கி ஆவார். இவரது இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. சிறுகதைத் தொகுப்புகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
✒இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம்(நாவல்) மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். இவரது தியாக பூமி புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
✒பிறப்பு : செப்டம்பர் 9, 1899
✒இறப்பு : திசம்பர் 5, 1954
✒இவர் செய்தியாளர், விமர்சகர் மற்றும் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
✒இவரது முதல் நூல் ஏட்டிக்குப் போட்டி (1927) ஆகும்.
சில புதினங்கள்:
✒கள்வனின் காதலி
✒தியாக பூமி
✒மகுடபதி
✒அலை ஓசை
✒மோகினித் தீவு
வரலாற்றுப் புதினங்கள்:
✒பார்த்திபன் கனவு
✒சிவகாமியின் சபதம்
✒பொன்னியின் செல்வன்
சில சிறுகதைகள்:
✒ஒற்றை ரோஜா
✒அமர வாழ்வு
✒திருடன் மகன் திருடன்
✒பரிசில் துறை
✒நாடகக்காரி
✒சந்திரமதி
✒கணையாழியின் கனவு
✒சுய நலம்
விருதுகள்:
✒சாகித்திய அகாதமி விருது (அலை ஓசை புதினத்திற்காக)
✒சங்கீத கலாசிகாமணி விருது, 1953.
கருத்துகள்
கருத்துரையிடுக