எழுத்தாளர் பிரபஞ்சன்
✒பிரபஞ்சன் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். ✒இயற்பெயர் : எஸ்.வைத்தியலிங்கம்
✒புனைப்பெயர் : பிரபஞ்சன்
✒பிறப்பு : ஏப்ரல் 27, 1945
✒இறப்பு : திசம்பர் 21, 2018
✒ இவர் இதுவரை 46 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
✒1995 ல் இவரது வரலாற்றுப் புதினம் "வானம் வசப்படும்" தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்புதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது.
✒இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
✒இவரது நாடகமான 'முட்டை' தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான "நேற்று மனிதர்கள்" பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது.
விருதுகள் :
✒சாகித்திய அகாதமி விருது - வானம் வசப்படும் (1995)
✒இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்
✒சி.பா.ஆதித்தனார் விருது - சந்தியா
✒தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள்
✒தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
எழுதிய நூல்கள் சில:
புதினங்கள்:
✒வானம் வசப்படும்
✒மகாநதி
✒பதவி
✒மானுடம் வெல்லும்
✒காகித மனிதர்கள்
✒பெண்மை வெல்க
✒சந்தியா
✒அப்பாவின் வேஷ்டி
✒முதல் மழை துளி
குறு நாவல்கள்:
✒ஆண்களும் பெண்களும்
சிறுகதை நூல்கள்:
✒நேற்று மனிதர்கள்
✒விட்டு விடுத்தலையாகி
✒இருட்டு வாசல்
✒ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
நாடகங்கள்:
✒முட்டை
✒அகல்யா
கட்டுரைகள்:
✒மயிலிற்கு குட்டி போட்டது
கருத்துகள்
கருத்துரையிடுக